என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளத்தில் தண்ணீர் பருகிய உயிரை விட்ட பசுமாடு
குளத்தில் தண்ணீர் பருகிய பசுமாடு உயிரிழப்பு
அறந்தாங்கியில் குளத்தில் தண்ணீர் பருகிய பசுமாடு உயிரிழந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் எல்சாம் (வயது41) இவர் பசுமாடு ஒன்று வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பசுமாடு வழக்கம்போல் மேய்ந்துவிட்டு அருகே உள்ள பெரிய கண்மாயில் தண்ணீர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளது.வீட்டிற்கு வந்ததிலிருந்தே மாடு சோம்பலாக காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாடு நேற்று திடீரென மயங்கி கீழே விழுந்து உயிருக்கு போராடியுள்ளது. அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாட்டை பரிசோதனை செய்த மருத்துவர், மாடு ஏதோ விஷத்தை உட்கொண்டுள்ளது என கூறிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து மாடு சிறிது நேரத்தில் இறந்துள்ளது.
இதற்கிடையில் குளத்தில் நீந்திய வாத்து,மீன்கள் ஆகியன இறந்த நிலையில் காணப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய கண்மாய் ஏலம் விடப்பட்டது.
ஏலம் விடப்பட்ட மறுநாளிலிருந்தே குளத்தில் மீன்கள் ஆங்காங்கே இறந்து மிதக்க தொடங்கின. இதை ஆரம்பத்தில் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது தண்ணீர் குடித்த மாடு இறந்து விட்டது.
மேலும் வாத்து, மீன்கள் போன்றவை தொடர்ந்து இறக்கத் தொடங்கியுள்ளன. எனவே உரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் கலந்துள்ள விஷத்தன்மை குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தக் கேட்டுக் கொண்டனர்.
மேலும் தற்போது பள்ளிகள் விடுமுறை காலங்கள் ஆகையால், சிறுவர்கள் குளத்தில் குளிக்கச் சென்று அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு நடவடிக்கை மேற்க்கொள்ள கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக குளத்தில் விஷம் கலந்துள்ளது யாரும் குளிக்கச் செல்ல வேண்டாம் என கிராம மக்களுக்கு, கிராமம் சார்பில் ஒலிப்பெருக்கி மூலமாக அறிவுறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
Next Story






