என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுப்பட்ட கூட்டுறவுதுறை அலுவலர்கள்
பல்வேறு கோரிக்கை அட்டை அணிந்து கூட்டுறவு துறை அலுவலர்கள் பணியில் ஈடுப்பட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், துணைபதிவாளர் அலுவலகம் மற்றுத் துணைபதிவாளர் அலுவலகம் பொதுவிநியோக திட்டம் ஆகிய அலுவலகங்களில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இதில் விகிதாச்சார விதிகளை தளர்த்தி தகுதியுள்ள அனைத்து இளநிலை ஆய்வாளர்களை முதுநிலை ஆய்வாளராகவும், பதிவறை எழுத்தர்,
அலுவலக உதவியாளர், இரவு காவலர் ஆகியோரை இளநிலை உதவியாளர்களாகவும், இளநிலை உதவியாளர், தட்டச்சர் சுருக்கெழுத்து, தட்டச்சர் ஆகியோரை இளநிலை ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
தேசிய துணை பதிவாளர் பதவி உயர்வு பட்டியலையும், தேசிய கூட்டுறவு சார்பதிவாளர் பதவி உயர்வு பட்டியலையும் வரும் 31ம் தேதிக்குள் அங்கீகரித்து பணியிடம் வழங்க வேண்டும்.
கூட்டுறவு சார்பதிவாளர் நல அலுவலர் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர் ஆகியோரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல் இயக்குனராக நியமனம் செய்ய வலியுறுத்தும் பதிவாளர் சுற்றறிக்கையை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சிவக்குமார் தலைமையில் 32 பேர் ஈடுபட்டனர்.
Next Story






