என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரிக்கை.
    X
    கோரிக்கை.

    நர்சரி பண்ணை அமைக்க கோரிக்கை

    மதுரை மாவட்டத்தில் தென்னங்கன்று நர்சரி பண்ணை அமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மேலூர்

    மேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இளமுருகன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. 

    மதுரை மாவட்டத்தில் தென்னங்கன்று நர்சரி பண்ணைகள் அரசு அமைக்க வில்லை. இதனால் மதுரை மாவட்ட விவசாயிகள் வெளி மாவட்டங்களில் உள்ள தமிழக அரசின் தென்னங்கன்று நர்சரி பண்ணைகளுக்கு செல்கின்றனர். 

    அந்தந்த மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்களின் பட்டா, சிட்டா, அடங்கல் ஆவணங்களுக்கு மட்டுமே தென்னங்கன்றுகளை வழங்குவதாக கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். 

    இதனால் தனியாரிடம் தென்னங்கன்றுகளை வாங்கி அவை சரிவர வளர்ச்சி அடையாமல் மதுரை மாவட்ட விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.
     
    பல்வேறு மாவட்ட ங்களில் தென்னை நர்சரி பண்ணைகள் அமைத்து ள்ளது போன்று மதுரை மாவட்டத்திலும் தமிழ்க அரசு அமைக்க வேண்டும்.

     கரும்பு ஆலைகளுக்கு விடுவிக்க வேண்டிய நிதி மற்றும் மில்லில் ஏற்படும் குறைகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

    நெல் கொள்முதல் மையங்களில் இன்னும் பல விவசாயிகளுக்கு நிதி வரவு வைக்கப்படாமல் உள்ளது. கொள்முதல் நிலையங்களில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு உள்ளது. இதனை விசாரணை கமிஷன் அமைத்து உண்மை தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

    மேலூர் தாலுகாவில் பல்வேறு கண்மாய் மற்றும் நீர்வழிப்பாதைகள் தனியார்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும், ஆறுகளில் மணல் திருடுவதை தடுக்க வேண்டும் விவசாய பாசன கிணற்று மின்மோட்டார்களுக்கு தேவையான மின்சாரம் கிடைக்காமல் பாதிப்படைவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×