என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடும்ப தகராறில் விவசாயி கொலை
Byமாலை மலர்12 May 2022 9:48 AM GMT (Updated: 12 May 2022 9:48 AM GMT)
குடும்ப தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மூக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் குமரேசன் (வயது 47). விவசாயி. இவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை நீண்ட நாட்களாகவே இருப்பதாக தெரிகிறது. இதனால் குமரேசன் தினந்தோறும் மது அருந்திவிட்டு குடும்பத்தில் தகராறு செய்வாராம்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் நடந்த தகராறில் குமரேசனை அவரது குடும்பத்தார் அடித்து கீழே தள்ளியதாக கூறுகின்றனர். இதில் மயங்கி கிடந்த குமரேசனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு புதுகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குமரேசன் இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து வந்த புகாரின் பேரில் டிஎஸ்பி வடிவேல், ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து சம்பட்டி விடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X