என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் பொறியாளர் முரளி ஆய்வு செய்த போது எடுத்தபடம்.
    X
    வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் பொறியாளர் முரளி ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

    வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் செல்ல ரூ.1¼ கோடியில் பாலம்

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் செல்ல ரூ.1¼ கோடியில் பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கி உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் தடையின்றி செல்ல ரூ.1 ¼ கோடியில் சிறு பாலம் அமைக்கும் தொடக்க பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அப்போது வேங்கிக்கால் நிரம்பி மழை நீரில் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடித்து ஓடியது. 

    இதுமட்டுமின்றி இந்த வேங்கிக்கால் ஏரியில் வெளியேறிய உபரி நீர் மூலம் அவலூர் பேட்டை சாலை வழியாக சென்று திண்டிவனம் சாலையில் உள்ள நொச்சிமலை ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. 

    அப்போது உபரி நீர் செல்வதற்கு போதிய கால்வாய் வசதியில்லாததால் குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்தது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில் திருவண்ணாமலை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

    அதைதொடர்ந்து வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி வெளியேறும் வகையிலும் ஏரியின் எதிரில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் சிறிய பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

    பொக்லைன் எந்திரம் மூலம் ஏரி நீர் கோடி போகும் பகுதியில் பாலம் அமைக்கும் இடத்தில் பள்ளம் எடுக்கும் பணி நடைபெற்றது. அதுமட்டுமின்றி வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் வழி தடத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதியில் கல்வெட்டு அமைக்கும் பணிகளும் தொடங்கி உள்ளது. 

    நேற்று மாலை வேங்கிக்கால் ஏரி அருகில் சிறுபாலம் அமைக்கும் தொடக்க பணியை திருவண்ணாமலை கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் முரளி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, சாலை ஆய்வாளர் பச்சையப்பன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர் தடையின்றி செல்லும் வகையில் சிறு பாலம், கல்வெட்டு அகலப்படுத்தி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 

    இந்த பணிகள் சுமார் 2 மாதங்களில் நிறைவு பெறும் வகையில் என்றனர். மேலும் வேங்கிக்கால் ஏரி உபரி நீர் செல்லும் நெடுஞ்சாலைத்துறை உட்பட்ட பகுதியை தவிர மற்ற பகுதியில் உள்ள கால்வாய்களையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×