என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேகமூட்டம்
    X
    மேகமூட்டம்

    கோத்தகிரியில் கடும் குளிருடன் வீசும் சூறாவளி காற்று- பொதுமக்கள் அவதி

    சமவெளிப் பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோத்தகிரியில் குளிர் அதிகமாக காணப்படுவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த குளு குளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை வெயில் காணப்படும். குறிப்பாக மே மாதம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும்.

    இம்முறையும் கடந்த இரு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்த போதிலும் சமவெளி பகுதிகளை போன்று இங்கும் சூடான காலநிலை நிலவி வந்தது. கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் அசானி புயல் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு ஏற்றார்போல் நீலகிரி மாவட்டத்திலும் தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று அதிகமாக வீசி வருகிறது. இதனால் மரங்கள் வேரோடு சாயும் நிலையும் உள்ளது. சில இடங்களில் தகரை கூரைகள் போட்டு இருக்கும் இடத்தில் அதிகம் சத்தமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் உள்பட அனைவரும் பயத்துடன் காணப்படுகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் அதிகமான காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.

    இன்று காலை முதல் கடும் மேகமூட்டம் மற்றும் காற்று வீசி வருகிறது. அவ்வப்போது மழை துளிகள் விழுந்தன. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது குளுகுளு காலநிலை நிலவி வருகிறது.

    இந்த காலநிலையால் கோத்தகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மேலாடை பனியன், சுவர்ட்டர், கோட்டு, தொப்பி உள்ளிட்டவைகளை அணிந்து வருகின்றனர்.

    சமவெளிப் பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோத்தகிரியில் குளிர் அதிகமாக காணப்படுவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த குளு குளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×