search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை- அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு

    அ.தி.மு.க. நிர்வாகி மீது பாலியல் தொல்லை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மனைவி கவிதா (வயது 28).

    இவர் மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மம்சாபுரம் அ.தி.மு.க. முன்னாள் நகரச் செயலாளர் அய்யனார் கடந்த சில மாதங்களாக என்னை பின் தொடர்ந்து வந்து பாலியல் தொந்தரவு செய்து வருகிறார். தனது பேச்சை கேட்டு நடக்குமாறு மிரட்டுகிறார். ஆனால் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததோடு மறுத்துவிட்டேன்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது அய்யனாரின் மனைவி ஜோதியும், தனது கணவர் பேச்சை கேட்டு நடந்து கொள்ளுமாறும் இல்லையென்றால் உன்னை பற்றி அவதூறு பரப்பி விடுவேன் என மிரட்டினார். எனவே மேற்கண்ட 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தி அ.தி.மு.க. முன்னாள் நகரச் செயலாளர் அய்யனார், அவரது மனைவி ஜோதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அ.தி.மு.க. நிர்வாகி மீது பாலியல் தொல்லை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×