என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    வேப்பனப்பள்ளியில் நிதி நிறுவனம் நடத்தி 38 பேரிடம் ரூ.2.69 கோடி மோசடி

    வேப்பனப்பள்ளியில் நிதி நிறுவனம் நடத்தி 38 பேரிடம் ரூ.2 கோடியே 69 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த திம்மசந்திரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). பால் வியாபாரி. வி.மாதேப்பள்ளி பெரிய சூலாமலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (46), இவரது மனைவி முனிரத்தினம் (40). இவர்கள் அந்த பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

    இந்த நிதி நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் ரூ.14 லட்சம் டெபாசிட் செய்தார். இதையடுத்து கடந்த மாதம் அந்த பணததை செல்வராஜ் கேட்டார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியும், முனிரத்தினமும் பணம் கொடுக்க மறுத்து செல்வராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது தொடர்பாக செல்வராஜ் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இதே போல நிதி நிறுவனம் மூலம் 38 பேரிடம் ரூ.2 கோடியே 69 லட்சத்தை கிருஷ்ணமூர்த்தி, முனிரத்தினம் திருப்பி கொடுக்கால் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

    இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் கிருஷ்ணமூர்த்தி,அவரது மனைவி முனிரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×