என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
சிவகங்கையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
சிவகங்கை
சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (12-ந்தேதி) காலை 10 மணிக்கு வட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும்நாள் முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் இலவச வீட்டுமனைபட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கி கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் இதர கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட உள்ளன.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகா மில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
Next Story






