என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்கு பணியாளர்கள் ஆரணி நகராட்சி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட காட்சி.
ஆரணியில் டெங்கு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா
ஆரணியில் டெங்கு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கு டெங்கு கொசு பணிக்கு தனியார் நிறுவனம் மூலம் ஓப்பந்த தொழிலாளர்களாக 32பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் டெங்கு பணியாளர்கள் 33 வார்டுகளில் டெங்கு சம்மந்தபட்ட பணியை மேற்கொண்டு வருகிறன்றனர். இது மட்டுமின்றி கடந்த கொரோனா காலத்தில் முன்களபணியாளர்களாக கொரோனா சம்மந்தபட்ட பணிகளும் மேற்கொண்டு பணி செய்துள்ளனர்.
ஆனால் டெங்கு பணியாளர்களுக்கு கடந்த 2 மாத காலமாக பணியையும் வழங்கவில்லை. கடந்த 4 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை தினகூலியாக ரூ.326 வழங்குவதற்கு பதிலாக வெறும் 260 ரூபாய் வழங்கவதாகவும் டெங்கு பணியாளர்கள் குற்றசாட்டுகின்றனர்.
இதனையொடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஓப்பந்ததாரர் ஆகியோரிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் ஆத்திரமடைந்த டெங்கு பணியாளர்கள் ஓன்றுணைந்து ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் திடிரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்த வந்த ஆரணி டவுன் போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொண்டு 1வார காலத்தில் சம்பளம் வழங்குவதாக கூறியதன் பேரில் டெங்கு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய டெங்கு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காதததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Next Story






