search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தாயுமான சுவாமி செட்டிப்பெண்ணுக்கு மருத்துவம் பார்க்கும் வைபவம் நடைபெற்ற க
    X
    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தாயுமான சுவாமி செட்டிப்பெண்ணுக்கு மருத்துவம் பார்க்கும் வைபவம் நடைபெற்ற க

    மலைக்கோட்டை கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

    திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருச்சி:

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு சுவாமி அம்பாள் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு வீதி உலாவுடன் அருள்பாலித்தனர். 

    இதில் 5-ஆம் நாளான நேற்று சிவ பக்தியில் சிறந்த  செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு அவளது பேறுகாலத்தில் அவளது தாயாக வந்து பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. 

    இதற்காக  இரத்தினாவதிக்கு மருத்தவம் பார்க்க, சுகப்பிரசவ மருந்தும் பீஜாதானம் (வரதானம் நெல்) பக்தகோடிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் குழந்தை பிரசவம் பார்த்து 

    குழந்தையை தொட்டிலில் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அறுபத்து மூன்று நாயன்மார்கள் எழுந்தருளச் செய்து தெரு அடச்சான் விழாவாகச் கொண்டாடப்பட்டது. 

    திருவிழாவின் 6-ம் நாள் இன்று (திருக்கல்யாண வைபவத்தில்) அம்மன் காலையில் நந்தவன திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்தல், பின்னர் திருக்கல்யாண உற்சவத்திற்கு பிறகு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறுகிறது. பிறகு நுாற்றுக்கால் மண்டபத்தில் திருநாண் பூட்டுதல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

    அதுசமயம் திருமாங்கல்ய பிரசாதம், சந்தனம், கற்கண்டு, தாலி சரடு ஆகியவை சுமங்கலி பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்பிறகு பருப்பு வடை, பாயசம், அன்னம் பாலித்து விருந்தினர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது. 

    மாலையில் யானை வாகனம் மற்றும் பல்லக்கில் சுவாமி அம்மன் காட்சிக் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    Next Story
    ×