search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் வள்ளுவர் கல்லூரியில் தனியார் வங்கி மூலம் நேர்காணல் நடந்த போது எடுத்த படம்.
    X
    கரூர் வள்ளுவர் கல்லூரியில் தனியார் வங்கி மூலம் நேர்காணல் நடந்த போது எடுத்த படம்.

    தனியார் கல்லூரியில் வளாக நேர்காணல்

    கரூர் வள்ளுவர் கல்லூரியில் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வளாக நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    கரூர்:

    தனியார் துறை வங்கிகளில் மிகவும் சிறந்து விளங்கும் சிட்டி யூனியன் வங்கியானது கடந்த 12 வருடங்களாக கரூர் வள்ளுவர் கல்லூரியில் வளாக நேர்காணல் நடத்திவருகிறது. 

    ஒவ்வொரு வருடமும் கணிசமான நூற்றுக்கணக்கான மாணவர்கள் பணியமர்தப்பட்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக பணிபுரிந்து பதவிஉயர்வும் பெற்றுள்ளனர். 

    வேறு எந்த கல்லூரியிலும் இந்த வாய்ப்பு இல்லாததால், வங்கிப்பணி சேரும் நோக்கத்திலேயே வள்ளுவர் கல்லூரியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வாரம்  6 மற்றும் 7 ஆம் தேதிகளில் இந்த வருடத்திர்கான  நேர்காணல் நடைபெற்றது. ஓய்வு பெற்ற வங்கி உயர் அதிகாரிகள் குழு மேற்கண்ட நேர்காணலை மேற்கொண்டனர். வணிகவியல் மற்றும் மேலாண்மை துறை மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

    நிகழ்ச்சியை கல்லூரி தலைவர் செங்குட்டுவன் துவக்கிவைத்தார்.  நல்ல வாய்ப்பை வழங்கிய கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவர்கள் மிகுந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.

    Next Story
    ×