என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
ஓசூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஓசூர்,
ஓசூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஸ்ரீராம ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
மாவட்ட துணைத்தலைவர் நரசிம்மமூர்த்தி, மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட மகளிரணி தலைவி கிரிஜம்மா மற்றும் ஓசூர், சூளகிரி,தளி கெலமங்கலம் ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி ஆகிய தாலுக்காக்களை பிரித்து, ஓசூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் மானிய பொருட்களை தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சூளகிரி தேன்கனிக்கோட்டை தாலுக்காக்களில் வாழும் மலைத்தோட்ட விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள பட்டாக்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுக்காக்களில் இதுவரை சூறைக்காற்று, கனமழையால் பசுமைக்குடில்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் கடன் ரத்து செய்து, இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீராம ரெட்டி பேசினார்.
Next Story






