என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    திருவண்ணாமலை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    ராஜந்தாங்கல், கருத்துவாம்பாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

    ராஜந்தாங்கல், கருத்துவாம்பாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் அருகில் ராஜந்தாங்கல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதில் பணியாற்றி வந்த ஒருவர் விவசாயி ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. 

    இந்த நிலையில் ராஜந்தாங்கல் மற்றும் கருத்துவாம்பாடி பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று சுமார் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மாலை முதல் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இரவு சுமார் 8 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அப்போது விவசாயிகள் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தினர். இது குறித்து விவசாயிகள் பிரதிநிதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

    இதில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேன்மொழி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி ஆகியோர் இருந்தனர். 

    தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பாக காணப்பட்டது.
    Next Story
    ×