search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
    X
    ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    சேத்துப்பட்டு, போளூரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    சேத்துப்பட்டு, போளூரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, செஞ்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். பச்சையப்பன், நடராஜன், ஜான், ராகினி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஏழுமலை, வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் 40 ஆண்டு காலமாக சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய குறைந்த பட்ச பென்சன் ரூ.7850 மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர் அண்ணா மலை, குழந்தைவேலு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கிளை தலைவர் பாபு, மாவட்ட கிளை செயலாளர் முத்துமாரி, மற்றும் சேத்துப்பட்டு, ஒன்றியத்தில் ஓய்வூதியர் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் போளூர் தாலுகா அலுவலகம் முன் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குறைந்தபட்ச பென்ஷன் தொகையை வழங்க வேண்டுமென்றும், அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×