என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவ்வாது மலை கோடை விழா நடத்துவது சம்பந்தமான ஆய்வு கூட்டம் கலெக்டர்  தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஜவ்வாது மலை கோடை விழா நடத்துவது சம்பந்தமான ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஜவ்வாதுமலை கோடை விழா குறித்து ஆலோசனை

    ஜவ்வாதுமலை கோடை விழா குறித்து ஆலோசனை நடந்தது.
    திருவண்ணாமலை:

    ஜவ்வாது மலை கோடை விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் காரணமாக நடைபெறாமல் இருந்தது. தற்போது வரும் ஜூன் மாதம் மிக சிறப்பாக நடத்துவது குறித்து கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை எழில் மிகு அழகிய தோற்றத்துடன் உள்ள ஜவ்வாது மலையில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம்.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கோடை விழாவில் கலந்துகொண்டு கண்டு களிப்பார்கள். 

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் காரணமாக கோடை விழா நடைபெறாமல் இருந்து வந்தது. 

    இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் கோடை விழா நடத்துவது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் கோடை விழா முன்னேற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    ஜவ்வாதுமலை கோடை விழாவில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது மிக விமரிசையாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பல்வேறு துறை சார்பில் கண்காட்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் படகு சவாரி, சாகச நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
    Next Story
    ×