என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சேத்துப்பட்டு அருகே பைக் விபத்தில் பெண் சாவு
சேத்துப்பட்டு அருகே பைக் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
சேத்துப்பட்டு:
விழுப்புரம் மாவட்டம் கீழ்செவலாம்பாடி, கிராமத்தை சேர்ந்தவர் அருண்பாண்டி, இவரது மனைவி இமாகுலேட், (வயது 25).கனவன் மனைவி இருவரும் ைபக்கில் சேத்துப்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சேத்துப்பட்டு அருகே உள்ள இந்திரா நகர் பகுதி அருகே வந்தபோது நிலை தடுமாறி இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு இமாகுலேட்வை அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இமாகுலேட் பரிதாபமாக இறந்தார்.இவரது உறவினர் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






