என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில் தமிழ்ச்சங்க விழா நடைபெற்றது.
    X
    மயிலாடுதுறையில் தமிழ்ச்சங்க விழா நடைபெற்றது.

    பிள்ளைகளுக்கு தமிழ்மொழியை தெளிவாக கற்றுகொடுக்க வேண்டும் - பாடலாசிரியர் அறிவுமதி வேண்டுகோள்

    மயிலாடுதுறையில் நடந்த தமிழ் சங்க விழாவில் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியை தெளிவாக கற்றுகொடுக்க வேண்டும் என பாடலாசிரியர் அறிவுமதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் சிங்கத் தமிழர் புகழ்பாடும் சங்கத் தமிழ் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிறுவனத் தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். பெரியசாமி பாவலர் சிவ.கோ.ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறையூர் கருணாகரன் வரவேற்றார். விமலா நாகேஷ், சிவசுப்பிரமணியன், அபர்ணா, ஆகியோர் மதிப்புரை வழங்கினர். தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் பேரவை தலைவர் முனைவர் சிவசங்கரன், தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை தலைவர் முனைவர் துரை குணசேகரன் தமிழ்ச் செம்மல் விருதுகளை பெற்றனர். மயிலாடுதுறை தமிழ்ச் சங்க சிறப்பு தலைவர் சிவலிங்கம், அறம் செய் அறக்கட்டளை சிவக்குமார், குறும்பட இயக்குனர் அய்யாசாமி ஆகியோர் மண்வள காப்பிலும், மனிதநேய வளர்ப்பிலும் பற்றிய சிறப்புரை வழங்கினார். 

    தஞ்சை தனியெழிலன் எழுதிய உரைக்கட்டும் தமிழருக்கு என்னும் கவிதை நூலை திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் ராமச்சந்திரன், ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் தமிழருக்கா என்ற தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி பேசும்போது:-

    தமிழ் மொழி வரும் காலங்களில் சிறுமை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காரணம் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் தமிழ் கற்றுக் கொடுப்பதில்லை. தமிழ் கலாச்சாரத்தை திராவிட மாடல் என்று அழைப்பது தமிழை அழிப்பதற்கான வழி என்றே கூறலாம். இதே நிலை நீடித்து வந்தால் உலகின் முதல் மொழி தமிழ் மொழியை சிதலம் அடைய செய்து அழித்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் காப்பா ற்றப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு வீட்டிலும் படித்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் மொழியும் தெளிவாக தவறு இல்லாமல் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில்தமிழ் வளர்ச்சி உதவி இயக்கு னர் அன்பரசி, நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் ராசகுமார், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என ஏராளமா னவர்கள் கலந்து கொண்ட னர். முடிவில் தமிழ் சங்க செயலாளர் மதுராந்தகன் நன்றி கூறினார்.
    Next Story
    ×