என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
வாகனம் மோதி முதியவர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள வம்பன் பகுதியில் சுமார் 70 வயது முதியவர் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்து வந்தார். இவர் சம்பவத்தன்று வம்பன் 4 ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






