என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாயமான மாணவன் குளத்தில் பிணமாக மீட்பு - நண்பர்களிடம் கிடுக்கிபிடி விசாரணை
Byமாலை மலர்9 May 2022 10:45 AM GMT (Updated: 9 May 2022 10:45 AM GMT)
மாயமான மாணவன் குளத்தில் பிணமாக மீட்பு - நண்பர்களிடம் கிடுக்கிபிடி விசாரணை - சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் ஆய்வு
நாகர்கோவில்:
திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் பகுதியை சேர்ந்தவர்நிஜிபூ. இவர்அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுஜிதா இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் .
இரண்டாவது மகன் ஆதில் முகமது (வயது 12) அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம்வகுப்பு படித்து வந்தான். சுஜிதாவின் தாயார் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியில் உள்ளது. ஆதில் முகமது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார்.
கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்து விளையாட சென்ற ஆதில் முகமது நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டுத்தேடினார்கள்.
ஆனால் அவர் கிடைக்க வில்லை. இதையடுத்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டார். மாயமான ஆதில் முகமதுவை தேடி வந்த நிலையில் நேற்று காலை மணத்திட்டை பகுதியில் உள்ள குளத்தில் ஆதில் முகமது பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.
இதையடுத்து ஆதில் முகமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அவரது தாயார் சுஜிதா தனது மகன் சாவில் சந்தேகம் இருப்ப தாக போலீசாரிடம் புகார் கூறினார். இதையடுத்து போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கிறார்கள். விசாரணையில் ஆதில் முகமது சம்பவ த்தன்று அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சென்றது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் சிலரிடமும் போலீ சார் விசாரணை மேற்கொ ண்டனர்.
இதற்கிடையில் ஆதில் முகமது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. அதில் ஆதில் முகமது எப்படி இறந்தார் என்பது தெரிய வரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X