என் மலர்
உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தப்படம்
சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
அறந்தாங்கி தாலுகா அமரசிம்மேந்திரபுரம் கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ சக்திவிநாயகர் திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான இன்று நான்காம்காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து சண்முகசுந்தரம் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் தமிழக சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அறந்தாங்கி தாலுகா அமரசிம்மேந்திரபுரம் கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ சக்திவிநாயகர் திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான இன்று நான்காம்காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து சண்முகசுந்தரம் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் தமிழக சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
Next Story






