என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதி சுற்றி ரூ.15 கோடியில் சிமெண்டு சாலை

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதி சுற்றி ரூ.15 கோடியில் சிமெண்டு சாலை பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சி, காந்தி சிலை அருகில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் மாட வீதியினை ரூ.15 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக மாற்றி அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். 

    அவர் பேசியதாவது:- 

    திருவண்ணாமலைக்கு புகழ்சேர்த்து கொண்டிருப்பது அண்ணா மலையார் கோவில், முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை போல், ஆட்சிபொறுப்பேற்றவுடன் தேரோடும் வீதியில் சிமெண்ட் சாலை அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாலை அமைக்கும் பணிகள் இனி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகபடியான நிதி ஒதுக்கீடு செய்து, சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 சாலை பணிகளை எடுத்துள்ளோம். அதில் கடலூர் - சித்தூர் சாலை 19.50 கி.மீ தொலைவில் ரூ.140.கோடி மதிப்பீட்டிலும், தானிப்பாடி வழியாக தருமபுரி முதல் திருவண்ணாமலையை இணைக்கிற அருர் சாலை, தருமபுரி – அருர் சாலை ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் நடைபெற உள்ளது. 

    மேலும், நபார்டு கிராம சாலை திட்டம் மூலம் ஒன்றிய சாலை, ஊராட்சி சாலைகளை தரம் உயர்த்துவது போன்ற 1465 கி.மீ ரூ.168 கோடி மதிப்பீட்டில் சாலைகள் எல்லாம் சீரமைக்கப்பட வேண்டும் என்று கலெக்டர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் சட்ட ப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், திருவண்ணாமலை  எம்.பி. சி.என்.அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி, கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி.

    திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்திக்வேல்மாறன், நகர மன்ற துணைத்தலைவர் எஸ்.ராஜாங்கம், திருவண்ணாமலை ஒன்றியக்குழுத்தலைவர்கள் கலைவாணி பரிமளா கலையரசன் (தண்டராம்பட்டு), மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் –சரவணன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×