என் மலர்
உள்ளூர் செய்திகள்

சின்னந்தியம்மன் கோவிலில் பாலஸ்தாபன விழா நடைபெற்றது.
சின்னந்தியம்மன் கோவில் பாலஸ்தாபன விழா
சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உள்ள சின்னந்தியம்மன் கோவிலில் பாலஸ்தாபன விழா நடைபெற்றது.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட இருந்தது. கோவிலை இடிக்கக்கூடாது என கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டதோடு சாலை மறியல் போராட்டமும் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் புதிதாக கோவில் கட்ட டெண்டர் விடப்பட்டு பூமிபூஜை செய்த பிறகே கோயிலை அப்புறப்படுத்த வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்துசமய அறநிலையத்துறையால் டெண்டர் வெளியிட–ப்பட்டுள்ளது. இதனையடுத்து ஞாயிற்று–க்கிழமை காலை புதிய கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, பாலஸ்தாபன விழா நடைபெற்றது.காத்திருப்பு கே.ஆர் சந்திரசேகர சிவம் பூஜைகளை செய்வித்தார்.
பாலஸ்தாபன விழாவில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கோயில், திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் மா.அழகிரிசாமி, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில சிவானந்தம், கோயில் முன்னாள் அறங்காவலர் ராஜாங்கம், சொர்ணபுரீஸ்வரர் கோயில் அறங்காவலர் சோ.ராஜராஜன் மற்றும் குல தெய்வ வழிபாட்டுக்காரர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
Next Story






