என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வட மாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

    மனைவியுடன் போனில் தகராறு வட மாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    மனைவியுடன் போனில் தகராறு வட மாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து  சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முத்திலேஷ் முக்கியா (வயது 38).இவருக்கு திருமணமாகி ரூபி தேவி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் பீகார் மாநிலத்தில் குடியிருந்து வருகிறார்கள்.

    முத்திலேஷ் முக்கியா ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த பொரசமேட்டு புதூரில் அவரது அக்கா வுடன் தங்கி அந்த பகுதியில்  உள்ள ஒரு நார் மில்லில் வேலை பார்த்து வந்தார். முத்திலேஷ் முக்கியாவுக்கு  குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இவர் அவரது மனைவி யுடன் போனில் பேசி வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிவகிரி பொரசமேட்டு புதூர் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் முத்திலேஷ் முக்கியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×