என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓட்டல்களில் ஷவர்மா விற்பனை? உணவு அதிகாரிகள் தீவிர சோதனை

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஷவர்மா விற்பனை செய்யப்பபடுகிறதா? என்று உணவு அதிகாரிகள் சோதனை நடத்தினனர்.
    கிருஷ்ணகிரி, 

    சமீபத்தில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் பலியானார். 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஷவர்மா விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறனர்.

    அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்த முள்ள 20 கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் ரமேஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் 26 ஷவர்மா கடைகள் மூடப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரியில் 5, ஓசூரில் 3, ஊத்தங்கரை ஒரு கடையிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஷவர்மா தயாரிக்கும் விதம், பயன்படுத்தப்படும் கோழி, இறச்சி மற்றும் உணவு பொருட்கள் குறிதது கடை பணி யாளர்களிடம் விசாரித்தனர். 

    மேலும் காலாவதியாகாத தரமான பொருட்கள் பொருட்கள் கொண்டு தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். சோதனையின் போது சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2.6 கிலோ ஷவர்மா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஓசூர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேஷ் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். 
    அதன்படி ஓசூர் ரிங்கோடு, பாகலூர் மற்றும் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள 7க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில் நேற்று மாலை திடீர் ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது 3 ஓட்டல்களில் 6 கிலோ கெட்டுப்போன சிக்கன் இருப்பது தெரிந்தது. இதனால் ஓட்டல் உரிமையாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதேபோல் ஓசூர் அருகே பத்தனப்பள்ளியில் 3 ஓட்டல்களில் நடந்த ஆய்வில் ஒரு ஓட்டலில் இருந்த ஒரு கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    தருமபுரி நகர் மற்றும் அதன் அருகே உள்ள இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாஸ்புட் கடைகளில் நேற்று இரவு தருமபுரி உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். 

    குளிர்சாதனை பெட்டி யில் வைக்கப்பட்டிருந்த 60 கிலோ சமைத்த பொறித்த இறைச்சியை பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
    Next Story
    ×