என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கூலித்தொழிலாளி தூக்கு போட்டு சாவு
கரிக்கலாம் பாக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கு போட்டு இறந்து போனார்.
புதுச்சேரி:
கரிக்கலாம் பாக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் அருகே கரிக்கலாம் பாக்கம் சுபலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜ மாணிக்கம். (வயது 38). கூலித்தொழிலாளி இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையே ராஜ மாணிக்கம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டார்.
இந்த நோயின் காரணமாக அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் ராஜமாணிக்கம் வீட்டிலேயே முடங்கினார். இதையடுத்து அவரது மனைவி ஜெகதீஸ்வரி கூலிவேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் வேலைக்கு செல்ல முடியாமல் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பாரமாக இருந்ததால் விரக்தியடைந்த ராஜமாணிக்கம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி ஜெகதீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம் பாக்கம் புறக்காவல் நிலைய போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






