search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

    மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    காக்கயந்தோப்பு மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

    காக்கயந்தோப்பு- வீராம்பட்டினம் ரோட்டில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். 

    இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தனர். திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 6-ந் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை 9 மணிமுதல் 10.30 வரை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் அனந்தராமன் பொதுச்செயலாளர் சங்கர், அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யப்பன், பி.சி.சி. காங்கேயன் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சசிக்குமார், காங்கிரஸ் பிரமுகர்கள் குகன், சாமிநாதன், மோகன், பாபு, சுரேஷ், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    Next Story
    ×