என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்பு படம் கோப்பு படம்](https://img.maalaimalar.com/Articles/2022/May/202205081408407084_Tamil_News_Pondicherry-NewsPrivate-company-manager-dies-of-heart_SECVPF.gif)
X
கோப்பு படம்
தனியார் நிறுவன மானேஜர் மாரடைப்பால் சாவு
By
மாலை மலர்8 May 2022 8:38 AM GMT (Updated: 8 May 2022 8:38 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தேவாலயத்துக்கு பிராத்தனைக்கு சென்ற தனியார் நிறுவன மானேஜர் திடீர் மாரடைப்பால் இறந்து போனார்.
புதுச்சேரி:
முத்தியால் பேட்டையில் தேவாலயத்துக்கு பிராத்தனைக்கு சென்ற தனியார் நிறுவன மானேஜர் திடீர் மாரடைப்பால் பரிதாபமாக இறந்து போனார்.
புதுவை முத்தியால்பேட்டை செயின்ட் ரொசோரியா வீதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது48) இவருக்கு அமலோற்பவமேரி என்ற மனைவியும் 13 வயதில் மகளும் மனைவி உள்ளனர். அலெஸ்சாண்டர் புதுவை பாரதி வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
அமலோற்பவமேரி முத்தியால் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள ஒரு பேஷன் தையல் கடையில் டெய்லராக வேலை செய்து வருகிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் அலெக்சாண்டரும் அவரது மனைவி அமலோற்பவ மேரியும் அப்பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது வழக்கம்.
அதுபோல் கணவன்-மனைவி இருவரும் தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு சென்றனர்.
பிரார்த்தனை முடிந்து தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த போது அலெஸ் சாண்டருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார். உடனே அவரது மனைவி அமலோற்பவமேரி மற்றும் அருகில் இருந்த உறவினர்கள் அலெக்சாண்டரை சிகிச்சைகாக ஒரு ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அலெக்சாண்டர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி அமலோற்பவ மேரி கொடுத்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு சென்ற தனியார் நிறுவன மானேஜர் திடீர் மாரடைப்பல் இறந்து போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)