search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மதுக்கடை சப்ளையரை தாக்கிய வாலிபர் கைது

    புதுவையில் மதுக்கடையில் சப்ளையரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    விழுப்புரம் அருகே கோழிப்பட்டு அம்பேத்கார் வீதியை சேர்ந்தவர் குமரேசன் வயது (50). இவர் கடந்த 2 மாதமாக புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு தனியார் மதுபானக்கடையில் சப்ளை யராக வேலை செய்து வருகிறார்.

    வழக்கம் போல் மதுக்கடையில் குமரேசன் வாடிக்கையாளருக்கு மது பானங்களை பரிமாரி க்கொண்டிருந்தார். 

    அப்போது அருள் (33) என்ற வாலிபர் வெளியி டத்தில் உணவு பண்டங்களை வாங்கிக்கொண்டு மது பானக்கடையில் மது அருந்த வந்தார். 

    இதற்க்கு குமரேசன் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அருள் தகாத வார்த்தைகளால் திட்டி சப்ளையர் குமரே சனை கன்னத்தில் தாக்கினார்.

    இதில் காயமடைந்த குமரேசன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருளை கைது செய்தனர்.

    புதுவை மேரி உழவர் கரை குண்டு சாலை ரோட்டில் உள்ள ஒரு மதுபானக்கடை அருகே ஒருவர் மது குடித்து விட்டு ஆபாச வார்த்தைகளால் பேசி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார்.

    இது பற்றிய தகவல் அறிந்த ரெட்டியார் பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் அரும்பார்த்தபுரம் திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த வேல்முருகன் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×