search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடியாத்தம் அருகே கிணற்றில் பெண் பிணம் - போலீசார் விசாரணை

    குடியாத்தம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பெண் உடலை கைபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பார்வதிபுரம் கிராமம் ஒட்டியபடி ரயில்வே பாதை அருகே உள்ள தனியார் விவசாய கிணறு ஒன்று உள்ளது. 

    இதில் இன்று காலை அந்த கிணற்றில்  அழுகிய நிலையில் பெண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக குடியாத்தம் நகர போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து பெண்ணின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    அந்தப் பெண் சுமார் 2 நாட்களுக்கு முன் இறந்த நிலையில் இரு–ந்ததால் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி உள்ளிட்ட போலீசார் அப் பெண்ணின் சடலத்தை. 

    கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கிணற்றில் மிதந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×