search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட காட்சி.
    X
    தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட காட்சி.

    வேலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு கோடை விழா

    வேலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது, கடந்த ஓராண்டு காலத்தில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து அலுவலகங்களும் ஆன் லைன் மூலமாகவே செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்கள் தங்கள் புகார்களை ஆன் லைன் மூலமாக அளிக்கவும், அதற்கு ஆன்லைன் மூலமாக தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.வேலூர் அருகே மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் விமான நிலைய விரிவாக்க பணிகள் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்கப்பட்ட பின்பு, மாவட்டத்திற்கு என்று தனியாக சுற்றுலா தளம் இல்லை என்றும் கோடை விழா நடத்தப்படுவதில்லை எனவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர், வேலூர் மாவட்டத்தில் புதிதாக சுற்றுலா தளம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் விரைவில் ெதாடங்கப்படும். பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேலூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×