search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவண்ணாமலை அருகே பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்

    திருவண்ணாமலை அருகே பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசு பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவியை சக மாணவன் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

    அந்த மாணவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்தநிலையில் அந்த மாணவி திருமணம் செய்து கொள்ள கேட்டபோது மாணவர் மறுத்துள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் காதலித்து ஏமாற்றியதாக சக மாணவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அந்த மாணவன் தற்போது தலைமறைவாக உள்ளார்.

    மேலும் போலீசார் அவரை தேடி வருகின்றனர். பிளஸ் 2 தேர்வு எழுதும் காலகட்டத்தில் மாணவன் தலைமறைவாக உள்ளதால் பிளஸ் டூ தேர்வு எழுதாமல் இருந்து வருகிறான்.
    Next Story
    ×