search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்
    X
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்

    நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்

    நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு வழங்கினர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பட்டா வழங்கிடக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 

    மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ், சிங்காரவேலன், ரவிச்சந்திரன், மாரியப்பன், வெண்ணிலா, விஜயகாந்த் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
    பின்னர் மனுக்களுடன் கலெக்டர் அலுவகத்திற்குள் நுழைந்தனர். 

    கோயில், மடம், அறக்கட்டளை, வக்போர்டு, தேவாலயங்கள் மற்றும் நீர்நிலை புறம்போக்கில் நீண்டகாலமாக குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்கிடக்கோரி நடத்திய மனுகொடுக்கும் போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் சப் கலெக்டர் ராமச்சத்திரனிடம் மனுக்களை அளித்தனர்.

    Next Story
    ×