search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சுநாத்
    X
    மஞ்சுநாத்

    குடும்பம் நடத்த மனைவி வராததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    குடும்பம் நடத்த மனைவி வராததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வேப்பனபள்ளி, 

    கர்நாடக மாநிலம் கேம்மனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது43). தொழிலாளியான இவரது மனைவி பிரமிளா (33). இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. 

    இந்த நிலையில் அடிக்கடி கணவன்-மனவைிக்கு இடையே  குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு பிரமிளா தனது ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், சிகராமகனப்பள்ளியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

    மனைவியை பிரிந்து இருந்த மஞ்சுநாத் மாமியார் வீடான சிகரமாகனப்பள்ளி கிராமத்திற்கு வந்து தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். 
    சம்வத்தன்று மஞ்சுநாத்தை மனைவி மற்றும் மாமியார்  இருவரும்  தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் நேற்று மாலை மஞ்சுநாத் வேப்பனப்பள்ளி குப்பம் செல்லும் சாலையோரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேப்பனபள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மஞ்சுநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×