என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடும்பம் நடத்த மனைவி வராததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்7 May 2022 9:58 AM GMT (Updated: 7 May 2022 9:58 AM GMT)
குடும்பம் நடத்த மனைவி வராததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பனபள்ளி,
கர்நாடக மாநிலம் கேம்மனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது43). தொழிலாளியான இவரது மனைவி பிரமிளா (33). இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
இந்த நிலையில் அடிக்கடி கணவன்-மனவைிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு பிரமிளா தனது ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், சிகராமகனப்பள்ளியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
மனைவியை பிரிந்து இருந்த மஞ்சுநாத் மாமியார் வீடான சிகரமாகனப்பள்ளி கிராமத்திற்கு வந்து தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார்.
சம்வத்தன்று மஞ்சுநாத்தை மனைவி மற்றும் மாமியார் இருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் நேற்று மாலை மஞ்சுநாத் வேப்பனப்பள்ளி குப்பம் செல்லும் சாலையோரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பனபள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மஞ்சுநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X