search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    நிலத்தகராறு மோதலில் முதியவர் உள்பட 3 பேர் கைது

    நாகரசம்பட்டி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் முதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்த அகரம் பிரிவு சாலை பகுதியைச் சேர்ந்தவர் விமல் (வயது35) இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சேட்டு (60) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இதனால் நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக சேட்டு அவரது உறவினர்கள் மூன்று பேர் சேர்ந்து விமலை தாக்கியுள்ளனர்.

    இது குறித்து விமல் நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் சேட்டு, ஜெயராமன், ராஜேஸ்வரி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×