search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    லிப்ட் அறுந்துவிழுந்து தொழிலாளர்கள் 3 பேர் காயம்

    லிப்ட் அறுந்துவிழுந்து தொழிலாளர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் அப்துல்காதர் மகன் ஷாருக்கான் (வயது25). வாலிகண்டபுரத்தை சேர்ந்த ஷேக்முகமது மகன் அபியுல்லா(40), கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் நாகராஜ் (29). இவர்கள் மூன்று பேரும் பெரம்பலூர் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.


     இவர்கள் லிப்டில் கீழேயிருந்து இரண்டாம் தளத்திற்கு பொருட்களை எடுத்து செல்லும் பொழுது இரண்டாம் தளம் வந்தவுடன் ரோப் அறுந்து லிப்ட் கீழே விழுந்தது.

    இதில் ஷாருக்கான், அபியுல்லா, நாகராஜ் ஆகிய 3பேரும் காயமடைந்தனர். இவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×