search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத் திறனாளி நல அலுவலகம் முன்பு இருக்கையில் கிடக்கும் மதுபான பாட்டிலை படத்தில் காணலாம்.
    X
    மாற்றுத் திறனாளி நல அலுவலகம் முன்பு இருக்கையில் கிடக்கும் மதுபான பாட்டிலை படத்தில் காணலாம்.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவியும் மதுபாட்டில்கள்.

    திருவண்ணாமலை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன்பு ஏராளமானோர் மதுகுடிப்பதால் பாட்டில்கள் குவிந்துகிடக்கின்றன.
    திருவண்ணாமலை, 

    திருவண்ணாமலை வேங்கிக்காலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், விளையாட்டு மைதானம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. 

    திருவண்ணாமலை வேங்கிக்காலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், விளையாட்டு மைதானம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. 
    இதில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் எதிரில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அமரும் வகையில் இரும்பு பென்ச்கள் மற்றும் அங்குள்ள மரங்களை சுற்றி சிமெண்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

    இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அடுத்து உள்ள இறைவனின் சமையலறை அருகில் உள்ள சிமெண்டு இருக்கைகளில் மதுபான பாட்டில்களும், அதன் அருகில் தரையில் ஏராளமான மதுமான பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்பளர்களும் கிடக்கின்றன.

    மதுபிரியர்களுக்கு வசதி இதனை அந்த வழியாக காணும் மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கே அந்த நிலையா என்று புலம்பிய படி செல்கின்றனர். இரவு நேரங்களில் மதுபிரியர்கள் சிலர் அமர்ந்து மது அருந்துவதற்கு  வசதியாக உள்ளதால் இங்கு வந்து மது அருந்திவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. 

    இதே நிலை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகமே மதுபிரியர்களின் கூடாரமாகவே மாறிவிடும். எனவே இதனை தடுக்க 

    இதுகுறித்து கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இரவு நேரங்களில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
    Next Story
    ×