search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் 27 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது

    ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழக மற்றும் மத்திய அரசின் சார்பில் ஊரக பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், குறிப்பாக திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்ப–டுத்து–வதை தடுக்க பொதுக்க–ழிப்பிட வளாகம் மற்றும் தனிநபர் இல்ல கழிப்பிடம் ஆகியவை கட்டிக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த, 2017 டிசம்பர் மாதத்தில் இருந்து திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் விளங்கி வருகின்றது.

    மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்களில், ஒரு லட்சத்து, 38 ஆயிரத்து, 935 தனி நபர் இல்லக்கழி ப்பறைகள் கட்டப்பட்டன.

    மேலும் வீடு, வீடாக சென்று தனிநபர் இல்லக்க–ழிப்பறைகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து கழிப்பறைகள் இல்லாத வீடுகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.30.81 கோடி செலவில் 27 ஆயிரத்து, 498 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து–ள்ளனர்.

    மேலும்ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் கழிப்பறை வசதி இல்லாத குடும்பங்கள் பயன்பெறும் வகையில், 31 ஒருங்கிணைந்த சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டி செயல்பாட்டில் உள்ளதாகவும், 13 ஒருங்கிணைந்த சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×