என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா
Byமாலை மலர்6 May 2022 9:42 AM GMT (Updated: 6 May 2022 9:42 AM GMT)
கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.
விழாவையொட்டி 4-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தி கொண்டும், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நேற்று இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. நாளை (சனிக்கிழமை) மறு பூஜை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X