search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தொண்டாமுத்தூரில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி

    போலீசார் பிரபாகரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் புதூரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 74). விவசாயி. சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
     
    அப்போது வாலிபர் ஒருவர் தனலட்சுமியின் பின்னால் நின்றிருந்தார். அந்த வாலிபர் திடீரென தனலட்சுமியின் கழுத்தில் இருந்த 7½ பவுன் தங்க நகையை பறிக்க முயற்சி செய்தார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி நகையை கையால் இருக்கமாக பிடித்து கொண்டார். பின்னர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த சஞ்சய் என்பவர் அங்கு ஓடி வந்தார்.

    அவர் வருவதை பார்த்து  அந்த வாலிபர் அங்கிருந்து தப்ப முயற்சி செய்தார். ஆனால் சஞ்சய் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். அப்போது அந்த வாலிபர் சஞ்சயை கீழே தள்ளி விட்டு தப்பி சென்றார்.
     
    இதுகுறித்து தனலட்சுமி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை தேடி வந்தனர்.

    அப்போது தொண்டாமுத்தூர் மல்லிகை நகரை சேர்ந்த பெயிண்டர் பிரபாகரன் (23) என்பவர் மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் அவர் மீது பல்வேறு வழக்குகள்இருப்பதும்  தெரியவந்தது.
    இதையடுத்து போலீசார் பிரபாகரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    Next Story
    ×