search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூச்சொரிதல் விழாவில் அமைச்சர் பங்கேற்ற காட்சி
    X
    பூச்சொரிதல் விழாவில் அமைச்சர் பங்கேற்ற காட்சி

    கோவில் பூச்சொரிதல் விழா

    கோவில் பூச்சொரிதல் விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரின் காவல் தெய்வமாக விளங்கும் பட்டமரத்தான் கோயில் பூத்திருவிழா கடந்த  மாதம்  29-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள்  பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து பட்டமரத்தான் சுவாமிக்கு சாத்தி வழிபட்டனர்.

    நிகழ்வில் தமிழக சட்டத்துறைஅமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று பால்குட ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.  ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, துணைத்தலைவர் தனலெட்சுமி அழகப்பன், பேரூராட்சிதலைவர் சுந்தரி அழகப்பன்,  ஒன்றிய ஆணையர்கள் பி.தங்கராஜூ, வை.சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×