search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னியநல்லூர் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த கலெக்டர் லலிதா.
    X
    சென்னியநல்லூர் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த கலெக்டர் லலிதா.

    வளர்ச்சி திட்டப் பணிகள் - கலெக்டர் ஆய்வு

    குத்தாலம் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 29 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இரா.லலிதா ஆய்வு மேற்க்கொண்டார்.

    குத்தாலம்  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூவலூர், தேரிழுந்தூர், பழைய கூடலூர், கருப்பூர் காஞ்சுவை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பழைய கூடலூர்  கிராம ஊராட்சியில்  வெள்ள நிவாரண தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில்  தார்சாலை அமைக்கும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ்  22.65 லட்சம் மதிப்பீட்டில்  நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற கட்டிட பணியினையும், ரூ.11  லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியையும்,  ரூ.8.18 மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், ரூ.4.60 லட்சம் செலவில் தடுப்பணை கட்டும் பணியினையும், கருப்பூர் கிராம ஊராட்சியில் ரூ.2.76 லட்சம் மதிப்பில் பிரதம மந்திரி வீடு வழங்கும்  திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணியையும்.ரூ18 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியையும், கஞ்சுவை கிராம ஊராட்சியில்  17.47 லட்சம் செலவில்  கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியையும் போன்ற பல்வேறு பணிகளை  ஆய்வு செய்தார்.
     
    இவ்வாய்வின்போது குத்தாலம் ஒன்றியக்குழுத்தலைவர் மகேந்திரன், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கஜேந்திரன், சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×