search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    ஜே குரூப்ஸ் கல்வி நிறுவனத்தில் விளையாட்டு விழா

    ஜே குரூப்ஸ் கல்வி நிறுவனத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஜெ.குருப்ஸ் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் சேசுதாஸ் பாலிடெக்னிக் கல்லூரியின் 14-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. ஒலிம்பிக் தீபத்தை ஆலங்குடி போலீஸ் சப் இன்பெக்டர் குணசேகரன் தலைமையேற்று துவக்கி வகித்தர். தீபத்தை மாணவ, மாணவிகள் முக்கிய வீதிவழியாக கல்லூரி மைதானத்திற்கு கொண்டு வந்தனர்.

    ஆலங்குடி தொழில் அதிபர் மற்றும் கல்வி நிறுவனத்தலைவர் சேசுதாஸ் தேசிய கொடியேற்றி விளையாட் டு போட்டிக்கான உறுதி மொழியை வாசிக்க  மாணவ, மாணவிகள் ஏற்று க்கொண்டனர். துணை தலைவர் வின்சென்ட் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார்.

    கல்லூரியின் தலைவர் சேசுதாஸ், நிர்வாக இயக்குனர் சேவியர், அறங்காவலர் மரியஅருள், செயலாளர் அந்தோணிராஜா, புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டின் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    நிறுவனத் தலைவர். சேசு உடையார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர்  மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுகள் மற்றும் அதற்கான விதிமுறைகள் பற்றியும், விளையாட்டுக்களின் பயன்களையும் பற்றியும் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக உடற்கல்வி பேராசிரியர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
    Next Story
    ×