என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பயிற்சி முகாம் நிறைவு விழா
Byமாலை மலர்5 May 2022 10:42 AM GMT (Updated: 5 May 2022 10:42 AM GMT)
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். ெபாறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) வருடாந்திர பயிற்சி முகாம் 10 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது.
இந்த முகாமில் கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி-கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு தூத்துக்குடி என்.சி.சி. கமாண்டிங் ஆபீசர் சுனில்உத்தம் பயிற்சி அளித்தார்.
நிறைவு விழாவில் காமராஜர் கலை அறிவியல் கல்லூரி மாணவி துர்கா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி கலந்து கொண்டார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
என்.சி.சி. மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. 1,600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல்- எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் மாணவர் ரங்கராஜ் முதல் பரிசை தட்டிச்சென்றார்.
800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கணிப் பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி ஜெயசுதா 2-வது பரிசு பெற்றார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் உயிரியியல் மருத்துவ பொறியியல் துறையைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி பரமேஸ்வரி 2-வது பரிசு பெற்றார்.
நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், (29 தமிழ்நாடு) இன்டிபெண்டன்ட் கம்ெபனி (என்.சி.சி.) மற்றும் தேசிய மாணவர்படையின் இணை அதிகாரி மாதவன் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கோவில்பட்டி அரசு கல்லூரி மாணவி கவுரி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X