என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சோலாரில் 63 ரேக்குகளுடன் புதிய பஸ் நிலையம்
Byமாலை மலர்5 May 2022 10:20 AM GMT (Updated: 5 May 2022 10:20 AM GMT)
தென்மாவட்ட பஸ்கள் வந்து செல்லும் வகையில் சோலாரில் 63 ரேக்குகளுடன் புதிய பஸ் நிலையம் பயணிகள் ஓய்வு அறை, முன்பதிவு மையமும் அமைகிறது.
ஈரோடு:
தென்மாவட்ட பஸ்கள் வந்து செல்லும் வகையில் சோலாரில் 63 ரேக்குகளுடன் புதிய பஸ் நிலையம் பயணிகள் ஓய்வு அறை, முன்பதிவு மையமும் அமைகிறது.
ஈரோடு பஸ் நிலை யத்திற்கு நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. மாநகரின் மைய பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளதால் பஸ்கள் வந்து செல்லும் போது கடும் போக்குவரத்து நிலவி வருகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக 2 புதிய பஸ் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கரூர், மதுரை, திருச்சி, ெநல்லை, நாகர்கோவில் என தென் மாவட்டங்களுக்கு வந்து செல்லும் பஸ்களுக்காக கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள சோலாரில் நவீன புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி புதிய பஸ் நிலையம் அமையும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமான 52 ஏக்கரில் உள்ள இடத்தில் 24 ஏக்கரில் புதிய நவீன பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.63.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் மண் வைத்து சமப்படுத்தும் பணி தொடங்கி முடிந்துள்ளது. இந்த புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 63 பஸ்கள் நிற்கும் ரேக்குகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் பஸ் நிலையம் அருகே டவுன் பஸ் வந்து செல்லும் வகையில் புதிய ரேக்குகள் அமைக்கப்படுகிறது. பஸ் நிலையம் சுற்றி 163 கடைகள் அமைக்கப்படுகிறது. பயணிகள் ஓய்வு அறைகள், கழிப்பிட வசதிகள், முன்பதிவு கவுண்டர் அமைய உள்ளது.
மேலும் மோட்டார் சைக்கிள்கள் நிற்கும் ஸ்டாண்டுகள், ஆட்டோ ஸ்டாண்ட் கள் அமைக்கப்படுகிறது. பஸ் நிலையம் அமைப்பதற்கான டெண்டர்கள் இன்னும் 3 வாரத்தில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். டெண்டர் முடிந்ததும் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து 2 வருடத்திற்குள் புது பஸ்நிலையம் கட்டி முடிக்க ப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய பஸ் நிலையம் அமைந்தால் மாவட்ட வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X