
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி குளக்காரன் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆனந்தன் (வயது 29) இவரும் கறம்பக்குடி -புதுக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த வீரையன் மகன் வெண்மணி (26) என்பவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கவிதா, இருதரப்பு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
பின்னர் காதல் ஜோடியிடம் தனித் தனியாக வாக்குமூலம் பெற்றக் கொண்டு, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி போலீசார் அனுப்பிவைத்தனர்.