என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
பயிர் காப்பீடு பணம் கோரி கலெக்டரிடம் மனு
பயிர் காப்பீடு பணம் கோரி கலெக்டரிடம் மனு
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே பெருமத்தூர் கிராமத்தில் விவசாயிகளின் பயிர் காப்பீட்டு பணத்தை பஞ்சாயத்து செயலாளர் கையாடல் செய்து விட்டதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி இளங்கோவன் மனைவி வசந்தா என்பவர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், நான் பயிர் காப்பீடு கோரி மனு அளித்து இருந்தேன்.
எனது 2018ம் ஆண்டு நெல்பயிருக்கு இழப்பீடாக 10 ஆயிரத்து 948 ரூபாய் கடந்த 2019ம் ஆண்டு ஏப்தல் மாதம் 4ம்தேதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது நாள் வரை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
மேலும் இது குறித்து விசாரித்த போது பெருமத்தூர் பஞ்சாயத்து எழுத்தர் சுதந்திரா என்பவர் கையாடல் செய்துள்ளதாக தெரிகிறது. எனவே கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுத்து எனது பயிர் காப்பீடு பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே பெருமத்தூர் கிராமத்தில் விவசாயிகளின் பயிர் காப்பீட்டு பணத்தை பஞ்சாயத்து செயலாளர் கையாடல் செய்து விட்டதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி இளங்கோவன் மனைவி வசந்தா என்பவர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், நான் பயிர் காப்பீடு கோரி மனு அளித்து இருந்தேன்.
எனது 2018ம் ஆண்டு நெல்பயிருக்கு இழப்பீடாக 10 ஆயிரத்து 948 ரூபாய் கடந்த 2019ம் ஆண்டு ஏப்தல் மாதம் 4ம்தேதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது நாள் வரை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
மேலும் இது குறித்து விசாரித்த போது பெருமத்தூர் பஞ்சாயத்து எழுத்தர் சுதந்திரா என்பவர் கையாடல் செய்துள்ளதாக தெரிகிறது. எனவே கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுத்து எனது பயிர் காப்பீடு பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






