search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    பெருந்துறை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:


    பெருந்துறை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ராசக்காபாளையத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ருக்மாங்கதன் (23).

     இவர் கடந்த 2 வருடங்களாக பெருந்துறை அடுத்துள்ள பல்ல கவுண்டன்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு ஓட்டலில் உணவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையின் இடது புறம் நடப்பட்டிருந்த மின்கம்பம் ஒன்று பலத்த மழையால் சாலையில் சாய்ந்து இருந்ததை கவனிக்காமல் வேகமாக சென்று மின்கம்பத்தில்  மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே ருக்மாங்கதன் பரிதாபமாக இறந்தார்.
     இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×