search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புள்ளி மான்களை வேட்டையாடியவர்களை படத்தில் காணலாம்.
    X
    புள்ளி மான்களை வேட்டையாடியவர்களை படத்தில் காணலாம்.

    மான் இறைச்சியுடன் கைதான 3 பேர் சிறையில் அடைப்பு

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான் இறைச்சியுடன் கைதான 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான் இறைச்சியுடன் கைதான 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இவற்றில் அதிகமாக புள்ளி–மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்ப–குதியில் மான்கள் வேட்டை–யா–டப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சத்திய–மங்கலம் வனக்கோட்டம், விளாமுண்டி வனச்ச–ரகம் குமரன் கோவில் சரகப்பகுதியில் விளா–முண்டி வனவர் ஆறுமுகம் தலைமையில் வனக்காப்பாளர்கள் ஹரிவிக்னேஷ், ரவிராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுடன் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது 108 குமரன் கோவில் வனப்பகுதியில் தெருநாய்களால் கடிக்க–ப்பட்டு இறந்து கிடந்த புள்ளிமான் இறைச்சியினை 3 பேர் சேர்ந்து துண்டுகளாக வெட்டி அதனை மஞ்சள் நிற சாக்குப்பையில் எடுத்து வைத்திருந்தனர்.  இதையடுத்து வனத்து–றையினர் வனப்ப–குதியில் கத்தியுடன் சுற்றி திரிந்த 3  பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் மான் இறைச்சி இருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர்கள் தொப்பம்பாளையம் அண்ணாநகரைச் சேர்ந்த பழனிச்சாமி (45), வெள்ளாளபாளையம் தொப்பம்பாளையத்தைச் சேர்ந்த நல்லதம்பி (39), வெள்ளாள பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (44) என்பது தெரிய வந்தது. 

    இதையடுத்து அவர்களி–டமிருந்த இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர் பின்னர் அவர்கள் 3 பேரையும் சத்திய–மங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×