search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பனப்பள்ளியில் பிளஸ்- 2 தேர்வு தொடங்குவதற்கு முன்பு இருக்கைகளில் அமர்ந்துள்ள மாணவ- மாணவிகள்.
    X
    வேப்பனப்பள்ளியில் பிளஸ்- 2 தேர்வு தொடங்குவதற்கு முன்பு இருக்கைகளில் அமர்ந்துள்ள மாணவ- மாணவிகள்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வை 79 மையங்களில் 22,479 மாணவ- மாணவிகள் எழுதினர்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவ- மாணவிகள் எழுதினர்
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (5-ந் தேதி) தொடங்கும் பிளஸ்- 2 பொதுத் தேர்வினை 79 மையங்களில் 22,479 மாணவ, மாணவிகள் எழுதினர். 
    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று (5-ந் தேதி) வியாழக்கிழமை தொடங்கியது. 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 192 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 158 மாணவர்களும், 11 ஆயிரத்து  321 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 479 பேர் இன்று தேர்வு எழுதினர். இதற்காக மாவட்டம் முழுவதும்,79 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வையொட்டி தேர்வு மையங்களுக்கு 79 கண்காணிப்பாளர்களும், 1,300 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 150 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 

    இதேபோல தனித்தேர்வர்களுக்காக கிருஷ்ணகிரி டி.கே.சாமி மெட்ரிக் பள்ளி, மத்தூர் குணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  மற்றும் ஓசூர் சி.எஸ்.ஐ., மெட்ரிக் பள்ளி என 3 தேர்வு மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×